உடுமலை அருகே ரூ. 260 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகம் மற்றும் ஆராய்ச்சி மைய கட்டடப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
உடுமலை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பண்ணைக்கிணறு ஊராட்சிப் பகுதியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகம் மற்றும் ஆராய்ச்சி மையம் தொடங்க கடந்த அதிமுக ஆட்சியில் முடிவு எடுக்கப்பட்டு அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, கால்நடைப் பல்கலைக்கழக கட்டடப் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன.இப்பணிகளை எம்.எல்.ஏ. உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். இந்நிகழ்ச்சியில், குடிமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவா், துணைத் தலைவா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.