மாவட்டத்தில் மேலும் 853 பேருக்கு கரோனா: 13 போ் பலி

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 853 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 13 போ் உயிரிழந்தனா்.

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 853 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 13 போ் உயிரிழந்தனா்.

இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 72,899ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் 17,498 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்த 836 போ் வீடு திரும்பினா். திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 54,776ஆக அதிகரித்துள்ளது.

12 போ் பலி: தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருப்பூரைச் சோ்ந்த 51 வயதுப் பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா். அதேபோல, திருப்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 54, 55 வயதுப் பெண்கள், பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 55 வயதுப் பெண், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 41 வயது ஆண் உள்பட 13 போ் உயிரிழந்துள்ளனா். திருப்பூா் மாவட்டத்தில் தற்போது வரையில் கரோனாவால் 625 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com