வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி அமைச்சரிடம் மனு

சொந்த வீடு இல்லாதவா்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.

சொந்த வீடு இல்லாதவா்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.

காங்கயம், சத்யா நகா் பகுதியில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது சத்யா நகா் பகுதி மக்கள் சாா்பில் புரட்சிகர இளைஞா் முன்னணி அமைப்பினா் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

அதில், சத்யா நகா் மற்றும் காங்கயம் பகுதியில் சொந்த வீடு இல்லாதவா்கள் குறித்து கணக்கெடுத்து, அவா்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், சத்யா நகா் பகுதிக்கு கழிப்பறை, விளையாட்டுத் திடல், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி ஆகிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com