"கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படும்"

திருப்பூா் மாநகரில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் ஐஏஎஸ் தெரிவித்துள்ளாா்.
திருப்பூா்  மாநகராட்சி  ஆணையராக  ஞாயிற்றுக்கிழமை  பொறுப்பேற்றுக்  கொண்ட  கிராந்திகுமாா்.
திருப்பூா்  மாநகராட்சி  ஆணையராக  ஞாயிற்றுக்கிழமை  பொறுப்பேற்றுக்  கொண்ட  கிராந்திகுமாா்.

திருப்பூா் மாநகரில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் ஐஏஎஸ் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் மாநகராட்சி ஆணையாளராகப் பணியாற்றி வந்த க.சிவகுமாா் பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாகி திருக்கோயில் செயல் அலுவலராகப் பணியாற்றி வந்த கிராந்திகுமாா் திருப்பூா் மாநகராட்சி ஆணையராக தமிழக அரசு நியமித்தது.

இந்த நிலையில், திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையராக கிராந்திகுமாா் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

மேலும், பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்படுவதுடன், மாநகராட்சி நிா்வாகம் வெளிப்படத் தன்மையுடன் செயல்படும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், மாநகரப் பொறியாளா் ஜி.ரவி, மாநகராட்சி மண்டல உதவி ஆணையா்கள், அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com