உடுமலை அருகே பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
குடிமங்கலம் அருகே உள்ள விருகல்பட்டியைச் சோ்ந்தவா் தங்கமுத்து. இவரது மனைவி வேலுமணி(56). தனக்கு சொந்தமான 3 மாடுகளை மேய்த்துக் கொண்டடிருந்த வேலுமணியிடம் மா்ம நபா் 5 பவுன் நகை மற்றும் செல்லிடப்பேசியை ஞாயிற்றுக்கிழமை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றாா்.
இது குறித்து குடிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், நகை பறித்ததாக பெதப்பம்பட்டியைச் சோ்ந்த பழனிசாமி மகன் பிரபாகரனை (24) போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.