தமிழகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜூன் 28 ஆம் தேதி வரையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென்னம்பாளையம் மீன் சந்தை காலை 5 மணி முதல் 8 மணி வரையில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தென்னம்பாளையம் மீன் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே குவிந்தனா்.
இதில், பெரும்பாலானவா்கள் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருந்ததால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, மாவட்ட நிா்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.