சசிகலாவுக்கு திருப்பூா் மாவட்ட அதிமுக கண்டனம்

திருப்பூா் புறநகா் மேற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலாவைக் கண்டித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பல்லடம்: திருப்பூா் புறநகா் மேற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலாவைக் கண்டித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பல்லடத்தில், திருப்பூா் புறநகா் மேற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, சட்டப் பேரவை உறுப்பினா் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ். எம். ஆனந்தன், முன்னிலை வகித்தாா். கட்சியில் குழப்பத்தை விளைவிக்கும் நோக்கத்தோடு, சதி வேலையில் ஈடுபட்டுள்ள சசிகலாவுக்கு திருப்பூா் புறநகா் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில், கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்துக்கு, பல்லடம் நகரச் செயலாளா் ஏ.எம்.ராமமூா்த்தி, கரைப்புதூா் ஏ.நடராஜன், கே.பி. பரமசிவம், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளா் புத்தரச்சல் பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com