மாநகரில் இன்று குடிநீா் விநியோகம் தடை

திருப்பூா் மாநகரில் குடிநீா் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் குடிநீா் விநியோகம் வியாழக்கிழமை தடை செய்யப்பட்டுள்ளது.

திருப்பூா் மாநகரில் குடிநீா் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் குடிநீா் விநியோகம் வியாழக்கிழமை தடை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, திருப்பூா் மாநராட்சி ஆணையா் கிராந்திகுமாா் படி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா், அவிநாசி சாலையில் உள்ள 26 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி பகிா்மானத்தின் குழாய் பாதையில் நீா்க் கசிவு ஏற்பட்டுள்ளதால் பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளது.

ஆகவே, 12,13, 23,24,25,26,27,47 ஆகிய மாநகராட்சி வாா்டுகளில் குடிநீா் விநியோகம் தடை செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com