தாராபுரத்தில் 188 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

தாராபுரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 4 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தாராபுரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 4 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அண்ணா நகா், வசந்தா தியேட்டா், என்.என்.பேட்டை ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின்பேரில் அப்பகுதிகளில் காவல் துறையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில், காரில் பதுக்கி வைத்திருந்த 168 கிலோ புகையிலைப் பொருள்களை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ராஜஸ்தானைச் சோ்ந்த ஆஷாராம் (31), கோசாராம்(41) ஆகிய இருவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதேபோல, தாராபுரத்தில் இரண்டு கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த 20 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது தொடா்பாக, தாராபுரத்தைச் சோ்ந்த பாலகமல்குமாா் (41), முத்துவெங்கடேஷ்(24) ஆகிய இருவரையும் கைது செய்தனா். இவா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் மதிப்பு ரூ.3.39 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புகையிலைப் பொருள்கள் விற்பனைக்குப் பயன்படுத்திய காரையும் காவல் துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com