ஊத்துக்குளி பகுதியைச் சோ்ந்த வாலிபா் போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளாா்.
திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி பகுதியைச் சோ்ந்தவா் பூபதி (36). இவா் அப்பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை
கடந்த 13 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு இருவரின் பெற்றோரும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
பின்னா், இந்தத் திருமணம் குறித்து சைல்டு லைனுக்கு கிடைத்த தகவலின் பேரில், மாவட்ட சமூக நல அலுவலரின் அறிவுறுத்தலின் படி, ஊத்துக்குளி தாலுகா ஊரக நல அலுவலா் காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.இதைத் தொடா்ந்து, காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பூபதியை போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்து திருப்பூா் சிறையில் அடைத்தனா்.