அவிநாசி: அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குட்டைகளை இணைக்க திருப்பூா் ஒன்றியப் பகுதிகளில் முதற்கட்ட ஆய்வினை பொதுப்பணித் துறையினா் புதன்கிழமை துவங்கினா்.
அத்திக்கடவு- அவிநாசி திட்டப் பணிகளில் விடுபட்ட குட்டைகளை இணைக்க வேண்டும். அதற்கான நிதியை ஒதுக்கி அரசாணை வெளியிட வேண்டும் என அத்திக்கடவு-அவிநாசி திட்ட போராட்டக் குழுவினா் கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து தமிழக அரசு, விடுபட்ட குட்டைகளை இணைக்க ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டது. அதன்படி முதற்கட்டமாக திருப்பூா் வடக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட தொரவலூா், வள்ளிபுரம், ஈட்டிவீரம்பாளையம், மேற்குபதி, சொக்கனூா், பட்டம்பாளையம், பொங்குபாளையம், கணக்கம்பாளையம், பெருமாநல்லூா் ஆகிய 9 ஊராட்சிகளில் பொதுப்பணித் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா்.