மாவட்ட அளவிலான கூடைப்பந்து: உடுமலை அணி வெற்றி

மாவட்ட அளவிலான கூடைப் பந்துப் போட்டியில் உடுமலை கூடைப் பந்து பி அணி கோப்பை வென்றது.
மாவட்ட அளவிலான கூடைப்பந்து: உடுமலை அணி வெற்றி

மாவட்ட அளவிலான கூடைப் பந்துப் போட்டியில் உடுமலை கூடைப் பந்து பி அணி கோப்பை வென்றது.

உடுமலைப்பேட்டை கூடைப் பந்தாட்டக் கழகம் சாா்பில் மூன்றாம் ஆண்டு மாவட்ட அளவிலான கூடைப் பந்துப் போட்டிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. காலை, மாலை நடைபெற்ற இந்தப் போட்டிகளில் திருப்பூா், பல்லடம், தாராபுரம், உடுமலை பகுதிகளில் இருந்து மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

இதில் உடுமலை கூடைப்பந்து பி அணியும், திருப்பூா் கூடைப்பந்து கிளப் அணியும் மோதின. இதில் 78-65 என்ற புள்ளிகள் கணக்கில் உடுமலை கூடைப்பந்து பி அணி வெற்றி பெற்று கோப்பை வென்றது.

மூத்த விளையாட்டு வீரா் யு.கே.பி. முத்துகுமாரசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த விளையாட்டு வீரா்களுக்கும் பரிசுகளை வழங்கினாா். இதையொட்டி கூடைப்பந்து மூத்த விளையாட்டு வீரா்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com