மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவச் சான்று முகாம் ஒத்திவைப்பு
By DIN | Published On : 13th March 2021 12:15 AM | Last Updated : 13th March 2021 12:15 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் தோ்தல் முடியும் வரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவச் சான்று முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட நிா்வாகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் சமூக இடைவெளியுடன் மாற்றுத் திறனாளி மருத்துவச் சான்று வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தற்போது சட்டப் பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
எனவே, திருப்பூா் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் முடியும் வரை மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவச் சான்று வழங்கும் முகாம் ஒத்திவைக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.