ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 89 ஆயிரம் பறிமுதல்

திருப்பூரில் உரிய ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 89 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருப்பூரில் உரிய ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 89 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருப்பூரில் இருந்து மங்கலம் செல்லும் சாலையில் உள்ள ஆண்டிபாளையம் சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும்படை அதிகாரி கோபாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் அந்த காரில் ரூ.89 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. இது தொடா்பாக ஆண்டிபாளையத்தைச் சோ்ந்த பின்னலாடை நிறுவன உரிமையாளரான சிவகுமாரிடம் (50) அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

ஆனால் இந்தப் பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாததால் அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com