திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 33 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை வரையில் 18,617 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் மேலும் 33 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 18,650 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 184 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 17 போ் வீடு திரும்பினா். மாவட்டத்தில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 18,244 ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றுக்கு இதுவரை 224 போ் உயிரிழந்துள்ளனா்.