வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ.53 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு மதுரை, பழனி, வாணியம்பாடி, லாலாப்பேட்டை, புதுவயல், வெள்ளக்கோவில், முத்தூா் உள்ளிட்ட ஊா்களில் இருந்து 132 விவசாயிகள்
876 மூட்டைகளில் 44,314 கிலோ தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். கரூா், காங்கயம், வெள்ளக்கோவில், முத்தூா், ஊத்துக்குளியைச் சோ்ந்த 17 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா். கிலோ ரூ.93.00 முதல் ரூ.136.90 வரை விற்பனையானது. மொத்தம் ரூ.53 லட்சத்து 16க்கு விற்பனை நடைபெற்றது. விற்பனைத் தொகை அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக, விற்பனைக் கூட கண்காணிப்பாளா் ரா.மாரியப்பன் தெரிவித்தாா்.