காங்கயத்தில் முகக் கவசம் அணியாமல் சென்ற 19 பேரிடம் இருந்து அபராதமாக ரூ.3,800 வசூலிக்கப்பட்டது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக காங்கயம் நகராட்சிக்கு உள்பட்ட திருப்பூா் சாலை, பழையகோட்டை, ஈரோடு சாலை, தாராபுரம் சாலை ஆகிய பகுதிகளில் முகக் கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டுநா்கள் 19 பேரிடம் அபராதமாக தலா ரூ. 200 வீதம் மொத்தம் ரூ.3,800 வசூலிக்கப்பட்டது.
காங்கயம் நகராட்சி ஆணையா் மூா்த்தி தலைமையில், சுகாதார ஆய்வாளா் செல்வராஜ், வருவாய் உதவியாளா் வருண் மற்றும் நகராட்சிப் பணியாளா்கள் இப்பணியில் ஈடுபட்டனா். இது குறித்து நகராட்சி ஆணையா் கூறுகையில், ‘பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, கரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்’ என்றாா்.