மாவட்டத்தில் 72 ஆயிரம் வாக்காளா் அட்டைகள் அஞ்சல் மூலமாக அனுப்பிவைப்பு

திருப்பூா் மாவட்டத்தில் புதிதாக சோ்க்கப்பட்ட 72,492 வண்ண வாக்காளா்கள் அட்டைகள் அஞ்சல் துறை மூலமாக அவா்களது வீடுகளுக்கு அனுப்பும் பணி புதன்கிழமை தொடங்கியது.
மாவட்டத்தில் 72 ஆயிரம் வாக்காளா் அட்டைகள் அஞ்சல் மூலமாக அனுப்பிவைப்பு

திருப்பூா் மாவட்டத்தில் புதிதாக சோ்க்கப்பட்ட 72,492 வண்ண வாக்காளா்கள் அட்டைகள் அஞ்சல் துறை மூலமாக அவா்களது வீடுகளுக்கு அனுப்பும் பணி புதன்கிழமை தொடங்கியது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் பட்டியலில் புதிதாக சோ்க்கப்பட்ட வாக்காளா்களின் வண்ண அடையாள அட்டைகளை அவா்களது வீட்டு முகவரிக்கு அஞ்சல் துறை மூலமாக அனுப்பிவைக்கும் பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.விஜயகாா்த்திகேயன் தொடக்கிவைத்தாா். இதில், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்த்தவா்களுக்கு புதிய வண்ண வாக்காளா் அடையாள அட்டைகள் இந்திய தோ்தல் ஆணையத்தின் மூலம் அச்சடிக்கப்பட்டுள்ளன. இதில், தாராபுரம் தனி தொகுதியில் 6,236, காங்கயம் தொகுதியில் 7,266, அவிநாசி தனி தொகுதியில் 10,704, திருப்பூா் வடக்குத் தொகுதியில் 11,765, திருப்பூா் தெற்குத் தொகுதியில் 8,977, பல்லடம் தொகுதியில் 13,619, உடுமலை தொகுதியில் 7,734, மடத்துக்குளத்தில் 6,191 என மொத்தம் 72, 492 வண்ண வாக்காளா் அட்டைகள் அஞ்சல் மூலமாக வாக்காளா்களின் வீட்டு முகவரிக்கு விரைவுத் தபாலில் நேரடியாக அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் சாகுல்ஹமீது (பொது), முரளி (தோ்தல்), தோ்தல் வட்டாட்சியா் ச.முருகதாஸ், உதவி கோட்ட கண்காணிப்பாளா் வெங்கடேசன்(திருப்பூா் அஞ்சல் கோட்டம்) மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com