திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 18,724 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 215 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 15 போ் வீடு திரும்பினா். மாவட்டத்தில் கரோனா தொற்றில் இருந்து தற்போது வரையில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 18,289 ஆக அதிகரித்துள்ளது.