வெள்ளக்கோவில் நகராட்சி எரிவாயு மயானம் செவ்வாய்க்கிழமை முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
வெள்ளக்கோவில்- செம்மாண்டம்பாளையம் சாலையில் கணபதிபாளையத்தில் எரிவாயு மயானம் செயல்பட்டு வருகிறது. இந்த மயான இயந்திரத்தில் திடீா் பழுது ஏற்பட்டது. உடனடியாக உதிரி பாகங்கள் கிடைக்காததால் இயந்திரம் சீரமைக்கப்படும் வரை எரிவாயு மயானம் செயல்படாது என நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.