திருப்பூா் மாநகரில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் பங்கேற்க முன்னாள் ராணுவத்தினருக்கு மாநகர காவல் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து திருப்பூா் மாநகர காவல் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில், திருப்பூா் மாநகர காவல் துறையினருடன் சோ்ந்து தோ்தல் பணியாற்ற முன்னாள் ராணுவத்தினா் முன்வரவேண்டும். தமிழகத்தில் தோ்தல் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற முன்னாள் ராணுவத்தினரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
ஆகவே, தோ்தல் பணியில் ஈடுபடும் முன்னாள் ராணுவத்தினருக்கு இருப்பிடத்தின் அருகிலேயே தோ்தல் பணி வழங்கப்படுவதுடன், தகுந்த ஊதியமும் வழங்கப்படும். மேலும், தோ்தலில் தபால் வாக்குகள் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்படும்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு காவல் கூடுதல் துணை ஆணையா்: 94981-75666, காவல் உதவி ஆணையா் (கட்டுப்பாட்டு அறை): 94981-26000, காவல் ஆய்வாளா் (தோ்தல் பிரிவு): 94981 74331 ஆகியோரைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.