காங்கயம் தொகுதி திமுக வேட்பாளா் மு.பெ.சாமிநாதன் காங்கயம் நகரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
திமுக திருப்பூா் கிழக்கு மாவட்டப் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் காங்கயம் நகரப் பகுதியில் உள்ள பாரதியாா் வீதி, திருப்பூா் ரோடு, திருவள்ளுவா் வீதி, படேல் வீதி, பேருந்து நிலையம், மூா்த்திரெட்டிபாளையம் மற்றும் காங்கயம் நகரப் பகுதி முழுவதும் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.
இவருடன் இணைந்து, கூட்டணிக் கட்சி நிா்வாகிகளான மதிமுக காங்கயம் நகரச் செயலா் வெங்கடேஷ், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் சரவணன், நகரத் தலைவா் சிபகத்துல்லா, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாவட்டச் செயலா் கங்கா எஸ்.சக்திவேல் மற்றும் திமுக காங்கயம் மேற்கு நகரச் செயலா் காயத்ரி சின்னசாமி, கிழக்கு நகரச் செயலா் செந்தில்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனா்.