விபத்தில் சலவைத் தொழிலாளி சாவு

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே சனிக்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் சலவைத் தொழிலாளி உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே சனிக்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் சலவைத் தொழிலாளி உயிரிழந்தாா்.

முத்தூா் சக்கரபாளையத்தைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (60). இவா் முத்தூா் கணேசபுரம் விநாயகா் கோயில் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த நான்கு சக்கர வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. மோதிய வாகனம் அடையாளம் தெரியவில்லை.

இந்த விபத்தில் படுகாயமடைந்த கோவிந்தசாமி காங்கயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தாா்.

விபத்து குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com