ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல்

காங்கயம் அருகே முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.1 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை காங்கயம் வட்டாட்சியா் சிவகாமியிடம் ஒப்படைக்கும் தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா்.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை காங்கயம் வட்டாட்சியா் சிவகாமியிடம் ஒப்படைக்கும் தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா்.

காங்கயம் அருகே முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.1 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

காங்கயம் தாலுகா, வெள்ளகோவில் அருகே உள்ள லக்கமநாயக்கன்பட்டி பகுதியில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பொ.ஜெகன்னாதன் தலைமையிலான தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, தாசவநாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்த ப.சிவசாமி, அவரது காரில் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் ரூ.1 லட்சத்து 4,200 எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, அந்தப் பணத்தை தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்து, தோ்தல் நடத்தும் உதவி அலுவலரும், காங்கயம் வட்டாட்சியருமான் சிவகாமியிடம் ஒப்படைத்தனா். பின்னா் இந்தப் பணம் காங்கயம் சாா்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com