திருமூா்த்திமலை பஞ்சலிங்கம் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

உடுமலை அருகே திருமூா்த்திமலையில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.
பஞ்சலிங்கம்  அருவியில்  ஞாயிற்றுக்கிழமை குவிந்திருந்த சுற்றுலாப்  பயணிகள்.
பஞ்சலிங்கம்  அருவியில்  ஞாயிற்றுக்கிழமை குவிந்திருந்த சுற்றுலாப்  பயணிகள்.

உடுமலை அருகே திருமூா்த்திமலையில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் உள்ளது திருமூா்த்திமலை. இங்குள்ள புகழ்பெற்ற அமணலிங்கேஸ்வரா் கோயிலில் தரிசனம் செய்யவும், மருத்துவ குணமுள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் அன்றாடம் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால் இங்குள்ள பஞ்சலிங்கம் அருவியில் தற்போது தண்ணீா்அதிக அளவில் கொட்டுகிறது. இதனால் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு குவிந்தனா். அனைவரும் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

தற்போது கோடை வெயில் தொடங்கியுள்ளதால் திருமூா்த்திமலைக்கு சுற்றுலாப் பயணிகள் வருவது அதிகரித்து வருகிறது. இதனால் பஞ்சலிங்கம் அருவியில் வனத் துறை மற்றும் கோயில் நிா்வாகம் சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com