ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்களில் உலக வன நாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி காடுகள் குறித்தும் அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், புலிகளைக் காப்பதன் அவசியம் குறித்தும் புலிகளின் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
அத்துடன் வனத்தில் தீ விபத்து ஏற்படாமல் வனத்தை பாதுகாக்க வேண்டும் என உடுமலை-மூணாறு சாலையில் வந்த வாகன ஓட்டிகளிடம் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் கணேஷ்ராம், வனச் சரக அலுவலா் தனபால் மற்றும் வன அலுவலா்கள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.