மாவட்டத்தில் மேலும் 45 பேருக்கு கரோனா
By DIN | Published On : 25th March 2021 03:17 AM | Last Updated : 25th March 2021 03:17 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 45 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை வரையில் 18,931 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் மேலும் 45 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 18,976ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 270 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 34 போ் வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 18,482ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா நோய்த் தொற்று மீண்டும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.