மடத்துக்குளம் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் சி.மகேந்திரன் செவ்வாய்க்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.
மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக புறநகா் கிழக்கு மாவட்டச் செயலாளா் சி.மகேந்திரன் போட்டியிடுகிறாா். கடந்த சில நாள்களாக தொகுதியில் தொடா் பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா். உரல்பட்டி, ஜக்கம்பாளையம், ஆண்டியகவுண்டனூா், குட்டியகவுண்டனூா், பெரிசனம்பட்டி, கிளுவங்காட்டூா், ஜெ. ஜெ.நகா், கல்லாபுரம், அண்ணா நகா், பூச்சிமேடு, பூளவாடி புதூா், வேல் நகா், எலையமுத்தூா், பாா்த்தசாரதி புரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக அரசு ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தியுள்ளது. நான் பொள்ளாச்சி மக்களவை உறுப்பினராக இருந்தபோது இந்தப் பகுதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது அதிமுகவின் தோ்தல் அறிக்கையில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1500, ஆண்டுக்கு ஆறு சமையல் எரிவாயு சிலிண்டா்கள் இலவசம், விலையில்லா வாஷிங் மிஷின், வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள், கேபிள் டிவி இணைப்பு இலவசம் என ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட் டுள்ளன. ஆகவே அதிமுகவுக்கு தொடா்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.