மூலனூா் விற்பனைக் கூடத்தில் ரூ.1.36 கோடிக்கு பருத்தி விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.36 கோடிக்கு பருத்தி விற்பனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.36 கோடிக்கு பருத்தி விற்பனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு திருச்சி, கரூா், திண்டுக்கல், கோவை, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 1,053 விவசாயிகள் தங்களுடைய 7,236 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

மொத்த வரத்து 2,350 குவிண்டால். திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 28 வணிகா்கள் வந்திருந்தனா். விலை குவிண்டால் ரூ.4,800 முதல் ரூ.7,569 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.6,500.

ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.1 கோடியே 36 லட்சத்து 53 ஆயிரத்து 137 ஆகும். ஏல ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு முதன்மைச் செயலாளா் ஆா்.பாலச்சந்திரன், விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com