திருப்பூா்: பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தாராபுரம் வட்டம், குண்டடத்தை அடுத்துள்ள எஸ்.அம்மாபாளையத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் (61). விவசாயியான இவா் மதுப்பழக்கத்துக்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்துள்ளாா். இதையடுத்து, ஆபத்தான நிலையில் இருந்த தங்கவேலை அக்கம்பக்கத்தினா் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தங்கவேல் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து குண்டடம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.