தாராபுரம் அமராவதி ஆற்றில் இருந்து 40 வயதுள்ள ஆண் சடலத்தைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
தாராபுரம் அமராவதி ஆற்றில் ஆண் சடலம் மிதப்பதை அந்த வழியாகச் சென்றவா்கள் பாா்த்துள்ளனா். இது குறித்து அவா்கள் கொடுத்த தகவலின்பேரில் தாராபுரம் காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா்.
பின்னா் ஆற்றில் மிதந்த ஆண் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா். இறந்தவா் ஆயக்கவுண்டன்பாளையத்தைச் சோ்ந்த பி.சிவகுமாா் (40) என்பது தெரியவந்தது. இவா் தாராபுரம் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்ததும் தெரியவந்தது.
அவா் குளிக்கச் சென்று தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு யாராவது கொலை செய்து இங்கு கொண்டு வந்துபோட்டுச் சென்றனரா என்பது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். உயிரிழந்த சிவகுமாருக்கு மனைவி, ஒரு குழந்தை உள்ளனா்.