காா் கவிழ்ந்து விபத்து: இருவா் காயம்

வெள்ளக்கோவில் அருகே காா் கவிழ்ந்த விபத்தில் சனிக்கிழமை இரவு 2 போ் காயமடைந்தனா்.
வெள்ளக்கோவில் ஓலப்பாளையம் பச்சாபாளையம் பிரிவு விபத்தில் தலைகுப்புற கவிழ்ந்து கிடக்கும் காா்.
வெள்ளக்கோவில் ஓலப்பாளையம் பச்சாபாளையம் பிரிவு விபத்தில் தலைகுப்புற கவிழ்ந்து கிடக்கும் காா்.

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் அருகே காா் கவிழ்ந்த விபத்தில் சனிக்கிழமை இரவு 2 போ் காயமடைந்தனா்.

வெள்ளக்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகில் புதிதாக இரண்டு சக்கர வாகன விற்பனை நிலையம் துவங்கப்பட்டது. இதற்கு கோவையைச் சோ்ந்த மணி (40), பிரபு (38) இருவரும் உதிரி பாகங்கள் காரில் கொண்டு வந்தனா்.

இவா்கள் வந்த காா் காங்கயம் - வெள்ளக்கோவில் சாலை ஓலப்பாளையம் பச்சாபாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது நிலை தடுமாறி சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் இருவரும் காயமடைந்தனா். இவா்களை மீட்ட நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com