திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 423 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தாா்.
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 423 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 26,409ஆக அதிகரித்துள்ளது. திருப்பூா், கோவையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,032 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்த 268 போ் வீடு திரும்பினா்.
இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 23,138ஆக அதிகரித்துள்ளது.
பெண் பலி: திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 38 வயதுப் பெண்ணுக்கு கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்த நிலையில், அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். திருப்பூா் மாவட்டத்தில் தற்போது வரையில் கரோனா நோய்த் தொற்றால் 243 போ் உயிரிழந்துள்ளனா்.