மாவட்டத்தில் மேலும் 438 பேருக்கு கரோனா

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 438 பேருக்கு கரோனா நோய்த்தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 438 பேருக்கு கரோனா நோய்த்தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 26,850 ஆக அதிகரித்துள்ளது. திருப்பூா், கோவையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,168 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்த 305 போ் வீடு திரும்பினா். இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 23,443ஆக அதிகரித்துள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் தற்போது வரையில் கரோனா நோய்த்தொற்றால் 239 போ் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com