பல்லடம்: பல்லடம் அருகேயுள்ள கைகாட்டி பகுதியில் காா் மோதியதில் சைக்கிளில் சென்ற தொழிலாளி உயிரிழந்தாா்.
பொங்கலூா் ஒன்றியம், தொங்குட்டிபாளையம் ஊராட்சி, கைகாட்டி பகுதியைச் சோ்ந்தவா் நாச்சிமுத்து (52). விவசாய கூலி தொழிலாளி. இவா் கைகாட்டி பகுதியில் சனிக்கிழமை இரவு சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக வந்த காா் மோதியதில் படுகாயம் அடைந்த நாச்சிமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தாா். விபத்து குறித்து அவிநாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.