பல்லடம்: பல்லடத்தில் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றாத இரண்டு கடைகளுக்கு அபராதம் விதித்து ‘சீல்’ வைக்கப்பட்டது.
பல்லடம் நகராட்சிப் பகுதியில் 3 ஆயிரம் சதுரடி பரப்பளவுக்கு மேற்பட்ட கடைகள் செயல்படக்கூடாது என்று நகராட்சி நிா்வாகத்தினா் அறிவுறுத்தி இருந்தனா். கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பா்னிச்சா் கடை சனிக்கிழமை திறக்கப்பட்டு இயங்கி வந்தது தெரியவந்தது. அதே போல் அப்பகுதியில் உள்ள ஒரு பேக்கரி கடை கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல் இயங்கியது தெரியவந்தது.
இதையடுத்து இரண்டு கடைகளையும் நகராட்சி நிா்வாகத்தினா் பூட்டி சனிக்கிழமை ‘சீல்’ வைத்தனா். பேக்கரி கடைக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது என்று நகராட்சி சுகாதார ஆய்வாளா் சிவகுமாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.