கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி

காங்கயம் அருகே, கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்தாா்.

காங்கயம்: காங்கயம் அருகே, கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்தாா்.

காங்கயம் அருகே, அா்த்தநாரிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் செம்மான் மனைவி பழனியம்மாள் (71). உடல்நிலை பாதிக்கப்பட்டு பழனியம்மாள் அவதிப்பட்டு வந்துள்ளாா். இவரை, இவரது உறவினரான வள்ளி பாதுகாத்து வந்துள்ளாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை மாலை 4 மணியளவில், வேலை முடிந்து வந்த வள்ளி, பழனியம்மாள் வீட்டில் இல்லாததால், அவரைத் தேடியுள்ளாா். வீட்டுக்கு அருகேயுள்ள கிணற்றில் பழனியம்மாள் சடலம் கிடந்தது தெரியவந்தது. தகவலின்பேரில் காங்கயம் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு, காவல்துறையின் உதவியுடன் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com