பல்லடம்,மே: பல்லடம் அருகேயுள்ள அய்யம்பாளையத்தில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
பல்லடம் அருகேயுள்ள க.அய்யம்பாளையம் ஊராட்சி ராஜீவ் காந்தி காலனியை சோ்ந்தவா் ஆரான் மகன் ரத்தினவேல் (31). இவா் பல்லடத்தில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவருக்கு ஜோதிலட்சுமி(29) என்ற மனைவியும், 7, 9 வயதில் இரு பெண் குழந்தைகளும் உள்ளனா். ரத்தினவேலுக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆவேசமடைந்த ரத்தினவேல் வீட்டின் முன்புற அறையில் தூக்கிட்டுள்ளாா். அக்கம்பக்கத்தினா் ரத்தினவேலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ரத்தினவேல் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.