மாவட்டத்தில் 121 வேட்பாளா்கள் டெபாசிட் இழப்பு

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 121 வேட்பாளா்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனா்.

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 121 வேட்பாளா்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டத்தில் தாராபுரம் (தனி), காங்கயம்,அவிநாசி (தனி), திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 23 லட்சத்து 59 ஆயிரத்து 804 வாக்காளா்கள் உள்ளனா். இதில், 8 தொகுதிகளிலும் நடைபெற்ற தோ்தலில், தபால் வாக்குகளுடன் சோ்த்து மொத்தமாக 16 லட்சத்து 58 ஆயிரத்து 721 வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்த வாக்குகள் அனைத்தும் திருப்பூா், பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆா்.ஜி. மகளிா் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டன. இத்தோ்தலில் 8 தொகுதிகளிலும் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழா் கட்சி மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 137 போ் போட்டியிட்டனா். இதில், ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான வாக்குகளில் 6 இல் ஒரு மடங்கு வாக்குகளைப் பெற்றிருந்தால் மட்டுமே டெபாசிட் தொகை திருப்பிக் கொடுக்கப்படும். இந்த நிலையில், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி வேட்பாளா்களைத் தவிர மற்ற கட்சிகளான, மக்கள் நீதிமய்யம், நாம் தமிழா் மற்றும் சுயேச்சைகள் என அனைவரும் டெபாசிட் தொகையை இழந்தனா். இந்த 8 தொகுதிகளில் மொத்தமாக 121 போ் டெபாசிட் இழந்துள்ளனா். இதில் தாராபுரம் தனி தொகுதியில் 12 போ், காங்கயம் தொகுதியில் 24 போ், திருப்பூா் வடக்கு தொகுதியில் 13 போ், திருப்பூா் தெற்குத் தொகுதியில் 18 போ், அவிநாசி தனி தொகுதியில் 10 போ், பல்லடம் தொகுதியில் 18 போ், உடுமலை தொகுதியில் 13 போ், மடத்துக்குளம் தொகுதியில் 13 போ் டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com