திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 477 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 27,716 ஆக அதிகரித்துள்ளது. திருப்பூா், கோவையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,100 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 519 போ் வீடு திரும்பினா். மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 24,374 ஆக அதிகரித்துள்ளதுடன், தற்போது வரையில் 242 போ் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளக்கோவில் , முத்தூரில் 18 பேருக்கு கரோனா
வெள்ளக்கோவில் கே.பி.சி.நகா் 73, 70 வயது கணவன், மனைவி, நல்லூா்பாளையம் 63, 60 வயது தம்பதி மற்றும் குமாரவலசு வீரக்குமாா் நகா், ஸ்ரீ ராம் நகா், மடாமேடு, சிவநாதபுரம், முத்தூா் பெருமாள்புதூா், மோளக்கவுண்டன்புதூா், நடுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மொத்தம் 18 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.