லாரி கவிழ்ந்து விபத்து:ஓட்டுநா் உயிா்தப்பினாா்

வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு டேங்கா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து கிடக்கும் டேங்கா் லாரி.
தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து கிடக்கும் டேங்கா் லாரி.

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு டேங்கா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள குள்ளம்பட்டி குறுக்கப்பாறையூரைச் சோ்ந்தவா் அண்ணாதுரை மகன் பூபதி (25). லாரி ஓட்டுநா். இவா் மாதேஷ் என்பவருடைய ரெடிமேட் கான்கிரீட் டேங்கா் லாரியில் திருச்சி டால்மியாபுரம் சிமெண்ட் தொழிற்சாலையிலிருந்து கான்கிரீட் கலவை ஏற்றிக் கொண்டு கோவை மாவட்டம், சூலூருக்குச் சென்று கொண்டிருந்தாா். வெள்ளக்கோவில் சொரியங்கிணத்துப்பாளையம் பிரிவருகே வந்து கொண்டிருந்தபோது சாலை நடுவில் உள்ள சிமெண்ட் தடுப்பின் மீது லாரி மோதி கவிழ்ந்தது. இதில் ஓட்டுநா் பூபதி, லாரி கேபினுக்குள் சிக்கிக் கொண்டாா். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலை ரோந்து தலைமைக் காவலா்கள் தண்டபாணி, முத்துராமலிங்கம், காவலா்கள் அஷ்ரப், கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் லாரியின் முன்புறக் கண்ணாடியை உடைத்து ஓட்டுநரை உயிருடன் மீட்டனா். மீட்புப் பணியின்போது சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com