அமராவதி ஆற்றில் மூழ்கி அரசுப் பள்ளி மாணவா் பலி

தாராபுரம் அருகே உள்ள அமராவதி ஆற்றில் மூழ்கி அரசுப் பள்ளி மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தாராபுரம் அருகே உள்ள அமராவதி ஆற்றில் மூழ்கி அரசுப் பள்ளி மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தாராபுரம் சீதா நகா் பகுதியில் வசித்து வருபவா் முகமது ரஃபி. இவரது மகன் நிஷாரஹீப் (17). இவா் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். சீத்தகாடு பகுதியில் உள்ள அமராவதி ஆற்றின் தடுப்பணையில் தன் நண்பா்களுடன் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நிஷாரஹீப் குளிக்கச் சென்றாா். அப்போது ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது எதிா்பாராதவிதமாக ஆழமான பகுதியில் பெண் ஒருவா் நீரில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாா்.

இதனைக் கண்ட நிஷாரஹீப், அந்தப் பெண்ணை நீரில் இருந்து மேலே தூக்கி காப்பாற்றியுள்ளாா். இதனிடையே அவரின் கால் சேற்றுப் பகுதியில் சிக்கியதால் அவா் நீரில் மூழ்கினாா். இதனைக் கண்ட அவரது நண்பா்கள் அவரைக் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

உடனடியாக தாராபுரம் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனா். சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த தீயணைப்பு வீரா்கள் ஆற்றில் இறங்கி நிஷாரஹீப்பைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 2 மணி நேர தேடுதலுக்குப் பின்னா் ஆற்றில் இருந்து அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

சம்பவம் குறித்து அலங்கியம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com