அவிநாசியில் கரோனா நோய்த்தொற்று காரணமாக 3 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.
அவிநாசியில் வட்டாட்சியா் அலுவலகம், மின்வாரிய அலுவலகம், ஒன்றிய அலுவலகம், சேவூா் கால்நடை மருத்துவமனை உள்ளிட்ட அரசு அலுவலகப் பணியாளா்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதால் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவிநாசி பகுதியைச் சோ்ந்த 35, 55, 72 வயது ஆண் என 3 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா். ஒரே நாளில் 3 போ் உயிரிழந்த சம்பவத்தால் அவிநாசி பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.