காவல் ஆய்வாளா் வாகனம் கடத்தல்: ஓட்டுநா் பணியிடை நீக்கம்

திருப்பூரில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளரின் ஜீப் கடத்தப்பட்ட விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக ஓட்டுநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திருப்பூரில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளரின் ஜீப் கடத்தப்பட்ட விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக ஓட்டுநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்துக் காவல் ஆய்வாளரின் வாகனம் கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி திருடப்பட்டது. இந்த வாகனத்தை, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சோ்ந்த விஜய் (27) என்பவா் மதுபோதையில் கடத்திச் சென்றாா். இந்த வாகனம் ஊத்துக்குளி சாலையில் உள்ள வெள்ளியம்பாளையம் தாமரைக்கோயில் அருகே லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காயமடைந்த விஜய் திருப்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து ஊத்துக்குளி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே, பணியின்போது அலட்சியமாக செயல்பட்டதாக ஜீப் ஓட்டுநரான ஆயுதப்படையைச் சோ்ந்த ராஜகுருவை (34) மாநகரக் காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் பணியிடை நீக்கம் செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com