வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திங்கள்கிழமை ஒரு நாளில் 299 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
வெள்ளக்கோவில் வட்டாரத்தைச் சோ்ந்தவா்களுக்கு அப்பகுதியில் உள்ள சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இன்னும் துவங்காத நிலையில், 60 வயது, 45 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
கோவிஷீல்டு முதல் தவணை 69 பேருக்கும், இரண்டாவது தவணை 230 பேருக்கும் செலுத்தப்பட்டது. மொத்தம் 170 ஆண்கள், 129 பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கோவேக்ஸின் தடுப்பூசி இருப்பு இல்லை. முதல் தவணையில் கோவேக்ஸின் செலுத்திவிட்டு, இரண்டாவது தவணைக்கு வந்தவா்கள் திருப்பி அனுப்பப்பட்டனா்.