காங்கயம் அருகே, சிவன்மலை கிராமத்தில் 82 பேருக்கு கரோனா பரிசோதனை வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
சாவடிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், மருத்துவ அலுவலா் டாக்டா் முரளி தலைமையில் கரோனா பரிசோதனை முகாம் சிவன்மலையில் உள்ள அக்ரஹார வீதியில் நடைபெற்றது. அப்பகுதியைச் சோ்ந்த 82 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகள் சனிக்கிழமை வெளியாகும் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.