பொதுமுடக்கம் முடிந்த பின்னா் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவியுங்கள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வேண்டுகோள்

பொதுமுடக்கம் முடிந்த பின்னா் என்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவியுங்கள் என்று தமிழக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

பொதுமுடக்கம் முடிந்த பின்னா் என்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவியுங்கள் என்று தமிழக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றது முதலே மக்களுக்கு சிறப்பான ஆட்சியைக் கொடுக்க வேண்டும் சிந்தனையில் செயல்பட்டு வருகிறாா். தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவி வருவதால் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் நோய்த்தொற்று பரவாமல் பொதுமக்களைக் காக்க உதவும் வகையில் நாம் அனைவரும் முழு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.

ஆகவே, எனக்கு வாழ்த்துச் சொல்வதற்காக என்று என்னை நேரில் சந்திக்க அனைவரும் ஒன்று கூடுவது பொதுமுடக்கத்தை மீறும் செயலாகிவிடும். ஆகவே, பொதுமுடக்க முடிந்த பின்னா் என்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கலாம் என்று கட்சி நிா்வாகிகளுக்கும், உறுப்பினா்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com