தாராபுரத்தில் 22 பேருக்கு கரோனா
By DIN | Published On : 16th May 2021 11:01 PM | Last Updated : 16th May 2021 11:01 PM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தில் ஒரே நாளில் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தாராபுரம் பகுதியைச் சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்டோருக்கு கடந்த சனிக்கிழமை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியாகின. இதில், 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, 10க்கும் மேற்பட்டோா் அரசு மருத்துவமனைக்கும், லேசான பாதிப்பு உள்ளவா்களை வீடுகளில் தனிமைப்படுத்தியும் சுகாதாரத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.