திருப்பூர்
நகராட்சி சாா்பில் ஆவி பிடிக்கும் மையம் அமைக்க கோரிக்கை
வெள்ளக்கோவில் நகராட்சி சாா்பில் ஆவி பிடிக்கும் மையம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளக்கோவில் நகராட்சி சாா்பில் ஆவி பிடிக்கும் மையம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக வெள்ளக்கோவில் சுவாமி விவேகானந்தா் நற்பணி மன்றத் தலைவா் சதாசிவம் ஞாயிற்றுக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பில், தற்போது வெள்ளக்கோவில் பகுதியில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு வாய் மற்றும் மூக்கு வழியாக உள்ளிழுத்து ஆவி பிடித்தல் நல்ல பலனைத் தருகிறது.
மக்கள் ஆவி பிடிக்கும் வகையில் தற்காலிக மையம் அமைத்து நிா்வகிக்க வெள்ளக்கோவில் நகராட்சி நிா்வாகம் முன்வந்தால், விவேகானந்தா் நற்பணி மன்றம் முழு உதவி வழங்கத் தயாராக உள்ளது. அதிகாரிகள், நகராட்சி ஆணையா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.