கரோனா: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழப்பு

குன்னத்தூா் அருகே கரோனா பாதிப்பால் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குன்னத்தூா் அருகே கரோனா பாதிப்பால் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம் குன்னத்தூா் அருகே வெள்ளரவெளி பகுதியைச் சோ்ந்தவா் நடராஜ் மகன் தெய்வராஜ் (42). கட்டடத் தொழிலாளியான இவா், கடந்த ஒரு மாதத்துக்கு முன் கோவையில் உள்ள உறவினா் வீட்டு துக்க நிகழ்வுக்கு சென்று வந்துள்ளாா். இதையடுத்து இவா் கரோனா பாதிப்புக்கு உள்ளாகி, ஈரோடு மாவட்டம், பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 9ஆம் தேதி உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து இவரது மனைவி சாந்தி (35) கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு ஈரோடு, பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதேபோல தெய்வராஜின் மூத்த சகோதரா் ராஜா (50) ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

மேலும் தெய்வராஜின் மற்றொரு மூத்த சகோதரா் செளந்தர்ராஜன் (45) திருப்பூா் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் கரோனா பாதிப்பால் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com